ஈரான் ஆனது இந்தியாவின் உதவி ஏதுமின்றி சாபஹார் துறைமுகத்திலிருந்து சஹிதான் வரையிலான இரயில் பாதை கட்டமைப்புப் பணியைத் தொடர முடிவு செய்து உள்ளது.
இந்த இரயில் திட்டமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். இது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு ஒரு மாற்று வர்த்தக வழித்தடத்தைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி, இந்தியாவானது பாகிஸ்தானின் உதவி ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானிற்கு சரக்குப் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும்.
இது ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இது ஈரானின் ஒரே கடல்சார் துறைமுகம் இதுவாகும்.
சீனாவானது குவாதர் துறைமுகத்தை மேம்படுத்த பாகிஸ்தானிற்கு உதவி செய்ய உறுதி அளித்துள்ளது.
குவாதர் துறைமுகமானது சாபஹார் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக 400 கிலோ மீட்டர் தொலைவிற்கும் குறைவாகவும், கடல் வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவிற்கும் குறைவாகவும் அமைந்துள்ளது.