நீடித்த ஆற்றல் கொள்கையின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிஎப்எல் விளக்குகள் மற்றும் ஒளிர்வு விளக்குகள் (இழை) ஆகியவற்றின் விற்பனைக்கு கேரள மாநில அரசு தடை விதிக்க இருக்கின்றது.
இது அம்மாநிலத்தின் உர்ஜ கேரளா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “மின்னிழையற்ற கேரளா” என்பதன் வரிசையில் அமைந்து உள்ளது.
மின்னிழையற்ற கேரளா என்ற திட்டமானது கேரள மாநில மின் வாரியம் மற்றும் கேரள ஆற்றல் மேலாண்மை மையம் ஆகியவற்றினால் செயல்படுத்தப் படுகின்றது.
உர்ஜ கேரளா திட்டம் என்பது ஒரு ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திட்டமாகும்.