TNPSC Thervupettagam

சிக்கிமின் 44வது மாநில தினம் – மே 16

May 20 , 2019 1887 days 943 0
  • சிக்கிம் மாநிலமானது மே 16 அன்று அதன் 44-வது மாநில தினத்தை கொண்டாடியது.
  • 1950 ஆம் ஆண்டின் உடன்படிக்கையின் படி தகவல் தொடர்பு, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சிக்கிமின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை இந்தியா கவனித்து வந்தது.
  • 1975 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக சிக்கிம் மக்கள் வாக்களித்தனர்.
  • 1975 ஆம் ஆண்டு மே 16 அன்று அதிகாரப் பூர்வமாக இந்தியாவின் 22வது மாநிலமாக சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது.
  • தொடக்கத்தில் வேறு எந்த மாநிலத்திற்கும் வழங்கப்படாத ஒரு சிறப்பு நிலையான “கூட்டு மாநிலமாக” அதனை அமைப்பதற்கான விதிமுறைகளை 35வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் வழங்கியது.
  • ஒரு மாதத்திற்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட 36வது அரசியலமைப்பு சட்டத் திருத்தமானது 35வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மாற்றி சிக்கிமை ஒரு முழுமையான மாநிலமாக மாற்றியது.
  • 2019 ஏப்ரல் 29, அன்று, சிக்கிமின் முதல்வரான பவன் குமார் சாம்லிங், நீண்ட காலம் (23 ஆண்டுகள் 4 மாதங்கள் மற்றும் 17 நாட்கள்) பதவி வகித்த முதலமைச்சர் எனும் புதிய சாதனையைப் படைத்தார்.
  • கடந்த வருடம், உலகின் முதல் 100 சதவிகித கரிம மாநிலமாக மாறியதற்காக "சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்கார்" என அறியப்படும் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான “எதிர்கால கொள்கை விருது” சிக்கிமிற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்