கோவிட் – 19 உலக நோய்த் தொற்று சமயத்தில் தேசியத் தேர்தலை நடத்திய ஆசியாவில் உள்ள 2வது நாடு சிங்கப்பூர் ஆகும்.
தற்போது பிரதமராக இருக்கும் லீ ஹசைன் லூங் என்பவரது தலைமையிலான மக்கள் நடவடிக்கைக் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
மக்கள் நடவடிக்கைக் கட்சியானது 1965 ஆம் ஆண்டில் அந்நாடு விடுதலை அடைந்ததிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு முன்பு, கோவிட் நோய்த் தொற்றின் போது தேர்தலை நடத்திய முதலாவது ஆசிய நாடு தென்கொரியா ஆகும்.