மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் டேரன் சமிக்கு பாகிஸ்தானுக்கு அவர் வழங்கியச்சேவைக்காக சித்தாரா-இ-பாகிஸ்தான் விருது வழங்கப் பட்டுள்ளது.
38 வயதான ஆல்-ரவுண்டரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பங்கேற்பை மீண்டும் கொண்டு வர உதவுவதில் அவர் ஆற்றியப்பங்கிற்காக இந்த விருதானது வழங்கப் பட்டது.
இது பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் மூன்றாவது உயரியக் குடிமை விருது ஆகும்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பாகிஸ்தானின் மிக உயரியக் குடிமை விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் என்ற விருதினைப் பெற்றார்.
பாகிஸ்தான் அதிபரால் இவருக்குக் கௌரவப் பாகிஸ்தான் குடியுரிமையும் வழங்கப் பட்டது.