மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE - Central Board of Secondary Education) 2019-20 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்சி சிறந்த ஆசிரியர்கள் விருதிற்காக 39 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அதில் பின்வரும் 3 ஆசிரியர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஷோபா ராமன், தலைமையாசிரியர், வித்யா மந்திர், உயர் நிலைப் பள்ளி, சென்னை.
டாக்டர் எஸ். தீபா, அறிவியல் ஆசிரியர், G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா, அம்பத்தூர் மேற்கு.
V. பிந்து, ஓசூர் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், காரப்பள்ளி.