சிப்ரி (ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்) ஆண்டுப் புத்தகம் 2020
June 21 , 2020 1527 days 482 0
ஸ்வீடனின் சிந்தனைக் குழுவான சிப்ரி ஆனது சமீபத்தில் இதை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆண்டின் புத்தகத்தின் படி, (2019 உடன் ஒப்பிடும்போது) இந்தியாவும் சீனாவும் தங்கள் அணு ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்தியுள்ளன.
சீனா முதன்முறையாக அணு ஆயுதங்களை தனது முப்படைக்கும் ஏற்றவாறு உருவாக்கி வருவதாக அந்த சிந்தனைக் குழு கூறுகிறது.
இந்தியாவும் தனது கடற்படைக் கூறுகளுக்கும் ஏற்ற வகையில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது.
சிப்ரியின் படி, உலகின் ஒன்பது பெரிய அணு ஆயுத நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா மட்டுமே உலக அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்திருக்கின்றன.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 13,400 அணு ஆயுதங்கள் இருந்தன.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 13,865 அணு ஆயுதங்கள் இருந்தன.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா 2010 ஆம் ஆண்டின் புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின் (New START - New Strategic Arms Reduction Treaty) கீழ் தங்கள் அணு ஆயுதங்களை குறைத்துள்ளன.
இந்தியாவின் அணு ஆயுதங்கள் 2019 ஆம் ஆண்டில் 130 -140 என்ற அளவிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 150 ஆக உயர்ந்துள்ளன.
சீனாவின் அணு ஆயுதங்கள் 2019 ல் ஆம் ஆண்டில் 290 போராயுதங்களிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 320 ஆக உயர்ந்துள்ளன.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் 2020 ஆம் ஆண்டில் 160 என்ற அளவை எட்டி உள்ளது.