7வது பொது விவகாரக் குறியீடானது (2022), பெங்களூருவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான பொது விவகார மைய அமைப்பினால் தயாரிக்கப் பட்டது.
இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக ஹரியானா உருவெடுத்துள்ளது.
இந்தியாவிலேயே சிறிய மாநிலங்களில் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக சிக்கிம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது
சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி போன்ற கருத்துருக்களில் ஹரியானா முன்னணியில் உள்ளது.
மேலும் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் மத்தியில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.
தொழிலாளர் உற்பத்தித் திறன், கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்தல், மேம்பாட்டிற்கான பொதுச் செலவினங்கள், சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் பரவல் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற குறிகாட்டிகளில் பொருளாதார நீதி மதிப்பிடப்பட்டது.