இந்தியாவைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரிகளான, காவல் துறை கண்காணிப்பாளர்கள் சந்தோஷ் குமார் சிங் மற்றும் அமித் குமார், சர்வதேச காவல் துறைத் தலைவர்கள் சங்கத்தின் (IACP) 2021 ஆம் ஆண்டிற்கான 40 அண்டர் 40 என்ற விருதுகளை வென்றுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த முதல் 40 காவல்துறை அதிகாரிகளில் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
"தங்கள் சமூகங்கள் மற்றும் சட்ட அமலாக்கத் தொழிலுக்கு அவர்கள் ஆற்றிய சிறப்பானத் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவையை வழங்கியதற்காக" வேண்டி அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.