வாரணாசியில் அமைந்துள்ள பெக்கர்ஸ் கார்ப்பரேஷன் எனும் புத்தொழில் நிறுவனமானது, இன்னோபிரீனர்ஸ் உலகப் புத்தொழில் நிறுவனங்கள் போட்டியில் சிறந்த சமூகத் தாக்கத்திற்கான விருதினைப் பெற்றது.
இந்தியாவில் நிலவும் இரவல் நிலை (பிச்சைத் தொழில்) சார்ந்த பிரச்சனையைத் தீர்க்கச் செய்வதற்கான அதன் புதுமை மிக்க வழிக்காக வேண்டி இந்தப் புத்தொழில் நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
பெகர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனமானது, இந்த நன்கொடைப் பணத்தைப் பயன்படுத்தி, இரவல் தொழில் செய்யும் நபர்களை வேலைவாய்ப்பினை உருவாக்கச் செய்பவர்களாக மாற்றி, அவர்களின் பல்வேறு செயல்திறன்களைப் புத்தொழில் நிறுவனங்களுக்காக உதவும் வகையில் மேம்படுத்த உள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 85,000 பிச்சைக்காரர்கள் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
பல்வேறு தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 413,670 பிச்சைக்காரர்களுக்கு இந்தியர்கள் ஆண்டுதோறும் 34,242 கோடி ரூபாயினை நன்கொடையாக வழங்குகிறார்கள்.