லாஸ் வேகாஸின் நெவேடா நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘2022 ஆம் ஆண்டிற்கான உலகத் திருமதி’ என்ற ஒரு போட்டியில் சிறந்த தேசிய ஆடைக்கான விருதானது இந்தியாவைச் சேர்ந்த நவ்தீப் கவுர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் 2021 ஆம் ஆண்டிற்கான திருமதி இந்தியா- உலக அழகிப் பட்டத்தை வென்றவர் மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகத் திருமதி போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டவர் ஆவார்.
இவர் ஒடிசாவின் எஃகு நகரம் என அழைக்கப்படும் ரூர்கேலாவின் அருகேயமைந்த ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
'அவந்த் கார்டே' எனும் உடையானது குண்டலினிச் சக்கரத்தின் வடிவில் அமைக்கப் பட்டது,
இது மனித உடலின் பாதம் முதல் தலை வரையில் ஆற்றல் பாய்வதைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப் பட்டது.