TNPSC Thervupettagam

சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்

March 28 , 2025 5 days 46 0
  • மத்திய அமைச்சரவையானது, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் (FTSCs) திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.
  • மத்திய அரசின் நிதியுதவி பெறும் இத்திட்டம் (CSS) ஆனது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் குறிப்பாக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான நீதி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது 96.28% என்ற சிறப்பான தீர்வு காணல் விகிதத்தைக் கொண்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் 88,902 புதிய வழக்குகள் தொடரப் பட்டன என்பதோடு மேலும் 85,595 வழக்குகள் இதன் மூலம் தீர்க்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்