”பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ” பிரச்சாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் பொருட்டு, ஹரியானா அரசானது இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமியர் மற்றும் மகளிர்களுக்கு இலவச மாதவிடாய்க் கால அணையாடைகளை (sanitary napkins) “மஹிலா எவம் கிஷோரி சம்மன் யோஜனா” என்ற திட்டம் வழங்க இருக்கின்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு செறிவூட்டிய, சுவை கொண்ட மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடியை "முக்கிய மந்திரி தூத் உபர் திட்டம்" என்ற திட்டம் வழங்க இருக்கின்றது.