உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் சிறையில் வழங்கப்படும் உணவிற்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு மற்றும் 'சரியான உணவினை உண்ணுதல்' என்ற குறியீடு ஆகியவற்றினை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர வழங்கீட்டு ஆணையம் (FSSAI) வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் சிறைக்கு அடுத்தபடியாக இந்தக் குறியீட்டினைப் பெற்ற இரண்டாவது சிறையாக புலந்த்ஷாஹர் சிறை திகழ்கிறது.
இந்த மாவட்ட சிறைச்சாலைக்கு ஐந்து நட்சத்திரங்கள் மதிப்பீடு வழங்கப்பட்டு சிறந்து விளங்கும் சிறைச்சாலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.