சத்தீஸ்கர் மாநில சட்ட சேவைகள் ஆணையம் (CGSLSA) சிறைச்சாலை லோக் அதாலத் மன்றங்களை நடத்துவதற்கான முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும் சிறையிலேயே வாடும் கைதிகள் அல்லது கொடூரமான குற்றங்களைச் சாராத குற்றங்களுக்காக முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதை எளிதாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதியன்று மாநிலத்தில் உள்ள 33 சிறைகளிலும் முதல் முறையாக சிறைச்சாலை லோக் அதாலத் நடத்தப்பட்டு, இதில் 448 கைதிகள் விடுவிக்கப் பட்டனர்.