ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் உஷா சர்மா, டெல்லியில் உள்ள பிகானீர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பக் கலை சார்ந்த ஒரு பூங்காவினைத் திறந்து வைத்தார்.
இந்த சிற்பப் பூங்காவில் நவீன கால மற்றும் சமகால அளவிலான கலை மற்றும் கலாச்சாரத்தினைச் சேர்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சிற்பப் பூங்காவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற சிற்பிகளின் சிற்பங்கள் / சிலைகள், வளர்ந்து வரும் கலைஞர்களின் சிலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.