சீனப் பொதுவுடமைக் கட்சியின் 20வது தேசிய மாநாடானது, அதன் அரசியல் அமைப்பைத் திருத்தியமைத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் கொள்கை வழிமுறைகளை அங்கீகரிக்கிறது.
1921 ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து, இந்த ஆண்டு நடைபெறும் இந்த மாநாடு 20வது மாநாடாகும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்தக் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக பதவி ஏற்று தனது அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், அமைப்பின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்புகளான, அரசியல் விவகாரங்களுக்கான குழு அல்லது பொலிட்பீரோ மற்றும் உயரடுக்கு பொலிட்பீரோ நிலைக் குழு (PSC) ஆகியவற்றுக்கான நியமனங்களும் அடங்கும்.