சீன அரசானது செய்திப் பரிமாற்றச் செயலிகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு நீதிபதிகளைக் கொண்டு இணையவழி - நீதிமன்றங்களைப் பயன்படுத்தித் தீர்ப்புகள் வழங்குவதற்கான (டிஜிட்டல் நீதிக்கான) புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்நிகர் நீதிபதிகளைக் கொண்டு டிஜிட்டல் நீதிமன்றங்களை சீனா உருவாக்கியுள்ளது.
சீனாவின் முன்னணி சமூக ஊடக செய்தித் தளமான “வீசாட்” செயலியில் உள்ள “நடமாடும் நீதிமன்றம்” என்ற விருப்பத் தேர்வானது பயனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வழக்குகளைத் தாக்கல் செய்தல், விசாரணைகள் மேற்கொள்ளல் மற்றும் சான்றுகள் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றை அனுமதிக்கின்றது.