TNPSC Thervupettagam

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை

September 4 , 2022 688 days 309 0
  • சின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு நடத்திய முறைகேடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • சின்ஜியாங்கில் வாழும் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம் இனக் குழுக்கள் சிறை வைக்கப் பட்டிருப்பதனை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
  • இந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது மிச்செல் பச்லெட் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஆணையராக இருந்தார்.
  • ஆனால் இந்த அறிக்கையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சீனா மறுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்