பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD – Organization for Economic Co-operation and Development) 37 உறுப்பினர் நாடுகளைக் காட்டிலும் சீன நாடானது அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை உமிழ்கிறது.
இது ரோடியம் குழுமம் எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
2019 ஆண்டில் உலகின் பசுமை இல்ல வாயுக்களில் 27 சதவீதத்தினை சீனா உருவாக்கி வெளியிட்டது.
இதன் மூலம் உலகப் பருவநிலை மாசுபாட்டின் கால் பங்கிற்கு மேல் சீனாவினால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
பசுமை இல்ல வாயு மாசுபாட்டில் 11 சதவீதப் பங்குடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக பசுமை இல்ல வாயு உமிழ்வில் 6 சதவீதப் பங்குடன் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.