பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நாட்டின் வளங்களைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட வரம்பற்ற ஆற்றல் மூலத்தினை சீனா கண்டறிந்துள்ளது.
புதிய புவியியல் ஆய்வு ஆனது, சீனாவில் உள்ள தோரியம் இருப்புக்கள் ஆனது முன்பு நம்பப் பட்டதை விட மிக அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது.
சீனாவின் பயான் ஓபோ சுரங்க வளாகத்தில் உள்ள கனிமங்கள் முழுமையாக எடுக்கப் பட்டால், 1 மில்லியன் டன் அளவிலான தோரியத்தினை உற்பத்தி செய்ய முடியும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
சுமார் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான சீனாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்கும்.