நிர்பயா வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இறுதித் தண்டனைத் தீர்ப்பிற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஒரு சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப் படுகின்றது.
சீராய்வு மனுக்கள் இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப் படுகின்றன.
மறு ஆய்வு மனு இந்திய உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் இந்த சீராய்வு மனுவானது தாக்கல் செய்யப் படும்.
சீராய்வு மனுவின் கருத்தாக்கமானது இந்திய அரசியலமைப்பின் 137வது சரத்தினால் ஆதரிக்கப் படுகின்றது.
இந்த சரத்தானது 145வது சரத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றமே மறு ஆய்வு செய்ய அனுமதிக்கின்றது.
மறு ஆய்வு மனுக்கள் அரசியலமைப்பின் 137வது சரத்தின் கீழ் தாக்கல் செய்யப் படுகின்றன. இது உச்ச நீதிமன்றம் தனது சொந்தத் தீர்ப்பையே மறு ஆய்வு செய்ய உதவுகின்றது.
உச்ச நீதிமன்ற விதிகள் 1966ன் கீழ், உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.