இவர் ஸ்ரீகுமார் என்ற புனைப்பெயரில் மலையாள இலக்கியத்தில் தனது இலக்கிய வாழ்வைத் தொடங்கினார்.
இவர் கேரளாவில் நடைபெற்ற அமைதிப் பள்ளத்தாக்கைப் பாதுகாத்தல் என்ற ஒரு இயக்கத்தின் மிகவும் துடிப்பு மிக்க பிரச்சாரகர்களில் ஒருவராக விளங்கினார்.
இவர் தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு முயற்சிகளுக்காக இந்திய அரசிடமிருந்து இந்திரா பிரியதர்ஷினி விருக்ச மித்ரா என்ற விருதைப் பெற்று உள்ளார்.
1996 ஆம் ஆண்டில் இவர் கேரள மாநிலத்தின் பெண்கள் (மகளிர்) ஆணையத்தின் முதலாவது தலைவராக பதவியேற்றார்.
இவரது பதவிக் காலமானது குடும்ப ஸ்ரீ திட்டம் தொடங்கப் பட்டதைக் குறிக்கின்றது.
அமைதிப் பள்ளத்தாக்கானது இந்தியாவில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகளாகும்.