TNPSC Thervupettagam

சுகாதாரம் மற்றும் மாசு குறித்த உலகளாவியக் கூட்டணி – அறிக்கை

December 24 , 2019 1670 days 660 0
  • சுகாதாரம் மற்றும் மாசு குறித்த உலகளாவிய கூட்டணியானது “2019 ஆம் ஆண்டின் மாசு மற்றும் சுகாதார நல அளவீடுகள்: உலகளாவிய, பிராந்திய மற்றும் நாடுகள் தொடர்பான பகுப்பாய்வு” என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, மாசு காரணமாக ஏற்படும் அகால இறப்புகளின் (வயது முதிர்வின் படி அல்லாமல்) அடிப்படையில் 2017 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 2.3 மில்லியன் (23,26,771 இறப்புகள்) இறப்புகளைக் கொண்டு, உலக அளவில் முன்னிலை வகிக்கின்றது.
  • இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா (18,65,566 இறப்புகள்), நைஜீரியா (2,79,318 இறப்புகள்) ஆகிய நாடுகள் அதிக அளவிலான இறப்புகளைக் கொண்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது காற்று, நீர் மற்றும் பணியிடத்தில் ஏற்படும் அசுத்தங்களின் உலகளாவிய தாக்கத்தை மதிப்பிடுகின்றது.

பிற தரவுகள்

  • மாசுபாடு காரணமாக 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்படும் மொத்த அகால இறப்புகளில், சாட் நாடு 287 இறப்புகளுடன் முதலிடத்திலும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (251) இரண்டாவது இடத்திலும் வட கொரியா (202) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் இந்தியா 174 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
  • காற்று மாசுபாட்டால் மட்டுமே அகால இறப்புகளில், சீனா 12, 42,987 இறப்புகளுடன் முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் (12,40,529 இறப்புகள்) பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் (1,28,005) உள்ளன.
  • இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள 3 பட்டியல்களில் இந்தியா மட்டுமே அனைத்திலும் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்