TNPSC Thervupettagam

சுஜய் – கடலோர காவற் ரோந்து படகு

December 23 , 2017 2401 days 749 0
  • 105 மீட்டர் நீளமுடைய ஆறு கடலோர காவற் ரோந்து படகுகள் வரிசையின் ஆறாவது கப்பலான “சுஜய்“ கப்பலை கோவாவில் இந்திய கடலோரக் காவற்படை ரோந்து காவற்பணியில் இணைத்துள்ளது.
  • “பெரும் வெற்றி“ எனும் பொருளுடைய சுஜய் எனும் பெயரானது இக்கப்பலிற்கு சூட்டப்பட்டுள்ளது.
  • 105 மீட்டர் நீளமுடைய கடலோர ரோந்து கடற்படகுகளானது கோவாவில் உள்ள கப்பற் கட்டுதளத்தில் உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு நவீனகால (State of Art) வழிகாட்டு மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் (Navigation and Communication), உணர்விகள் (Sensors) போன்றவை பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • வடகிழக்கு கடற்காவற் கட்டுப்பாட்டு  செயல் மற்றும் நிர்வாகப் பிரிவின் கீழ் ஒடிஸாவின் பாரதீப் கடலோரக் காவற்படை தளத்தில் இக்கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
  • இந்திய கடற்பரப்புகளின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களின் (Exclusive Economic Zone) கண்காணிப்பிற்கென ஈடுபடுத்தப்பட உள்ள இக்கப்பலானது குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடற்சார் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்