TNPSC Thervupettagam

சுதந்திரப் போராட்ட வீரர் N. சங்கரய்யா (102)

November 18 , 2023 226 days 241 0
  • சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் மிகவும் மூத்த பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான N. சங்கரய்யா சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஸ்தாபன உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • இந்தியப் பொதுவுடைமை கட்சியின் 32 தேசிய சபை உறுப்பினர்களில் அவரும் ஒருவராக இருந்த நிலையில், சித்தாந்த வேறுபாடுகளால் அந்தக் கட்சியை விட்டு வெளியேறியதால் அது 1964 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) நிறுவ வழி வகுத்தது.
  • சங்கரய்யா அவர்கள் 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1995 முதல் 2002 ஆம் ஆண்டு வரை அந்தக் கட்சியின் மாநிலக் குழு செயலாளராகவும் இருந்தார்.
  • முன்னதாக 2021 ஆம் ஆண்டில் சங்கரய்யா அவர்களுக்கு முதலமைச்சர் அவர்களால் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்