TNPSC Thervupettagam

சுபிகா ஓவிய நெருக்கடி – மணிப்பூர்

February 10 , 2024 160 days 218 0
  • சுபிகா ஓவியப் பாணியானது தற்போது எஞ்சியிருக்கும் அதன் ஆறு கையெழுத்துப் பிரதிகள் மூலம் மெய்தேய் சமூகத்தின் கலாச்சார வரலாற்றுடன் நுணுக்கமான விதத்தில் ஒன்றிணைந்துள்ளது.
  • அவை சுபிகா, சுபிகா அச்சௌபா, சுபிகா லைஷாபா, சுபிகா சௌடித், சுபிகா செய்தில் மற்றும் தெங்ராகேல் சுபிகா ஆகியனவாகும்.
  • துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தனித்துவமான கலை வடிவம் பற்றிய விழிப்புணர்வு பல ஆண்டுகளாக குறைந்து வருவதால், இது அதன் அழிவுக்கு வழி வகுக்கிறது.
  • காட்சிப் படங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட சுபிகா லைஷாபா, மெய்தே கலாச்சாரப் பாரம்பரியத்தின் நேரடி மற்றும் உண்மையான தொடர்ச்சியைக் குறிக்கிறது.
  • கோடுகள், வடிவமைப்புகள், வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் பாங்குகள் போன்ற கூறுகளை உள்ளடக்கிய காட்சி மொழியைக் கொண்டுள்ளன.
  • இந்தக் கையெழுத்துப் பிரதியில் காணப்படும் காட்சிப் படங்கள் கைவினை காகிதத்தில் வரையப்பட்டுள்ளன.
  • இந்தக் கையெழுத்துப் பிரதிகள் கொண்ட பொருட்கள் கைவினை காகிதம் அல்லது மரங்களின் பட்டைகள் ஆகியவற்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்