ஜப்பான் அரசானது அதன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அவர்களுக்கு, சுப்ரீம் ஆர்டர் ஆஃப் கிரிசாந்திமம் என்ற விருதினை அவரது மரணத்திற்குப் பின் வழங்கி கௌரவிக்க முடிவு செய்தது.
இது ஜப்பானின் மிக உயரிய விருதாகும்.
ஜப்பானின் பேரரசர் மெய்ஜி 1876 ஆம் ஆண்டில் கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் என்ற விருதினை நிறுவினார்.
ஜப்பானின் உயரிய விருதைப் பெற்ற நான்காவது முன்னாள் பிரதமர் இவர் ஆவார்.
இந்த விருதானது ஐரோப்பிய விருதுகளைப் போலல்லாமல், மரணத்திற்குப் பின்னரும் வழங்கப் படலாம்.