கர்நாடகாவில் நிலத்தடிச் சுரங்கங்கள் வழியாக நீர் வழங்குவதற்கான பண்டைய “கரேஸ் அமைப்பின்” ஒருங்கிணைந்த பகுதியான சுரங்க பவாடியானது 2020 ஆம் ஆண்டிற்கான உலக நினைவுச் சின்ன கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
உலக நினைவுச் சின்னங்கள் நிதியம் (World Monuments Fund - WMF) என்ற ஒரு அரசு சாரா நிறுவனத்தால் “தக்காணப் பீடபூமியின் பண்டைய நீர் அமைப்பு” என்ற பிரிவின் கீழ் இந்த நினைவுச் சின்னம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பண்டைய நினைவுச் சின்னங்களை மறுசீரமைப்பதை WMF அமைப்பு கண்காணிக்கின்றது.
கரேஸ் நிலத்தடி அமைப்பானது 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பீஜப்பூர் சுல்தானகத்தின் மன்னரான முதலாம் அலி அடில் ஷா என்பவரால் கட்டப்பட்டது.
இவரது வாரிசான இரண்டாவது இப்ராஹிம் அடில் ஷா என்பவர் இதை வலுப்படுத்த அதில் சில கூடுதல் கட்டமைப்புகளைச் சேர்த்தார்.
‘கரேஸ்’ ஆனது உலகின் மிகச் சிறந்த நீர் வழங்கல் அமைப்புகளில் ஒன்றாக நம்பப் படுகிறது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் இது மோசமான நிலையில் உள்ளது.