சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund - IMF) வாரியத்தில் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக பொருளாதார நிபுணரான சுர்ஜித் எஸ் பல்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இவர் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் (Economic Advisory Council to the Prime Minister / EAC-PM) பகுதிநேர உறுப்பினராகப் பணியாற்றினார்.
பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பல்லாவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இவர் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை இப்பதவியில் நீடிப்பார்.
உடல்நலக் குறைவால் காலமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான சுபிர் கோகர்னுக்குப் பிறகு பல்லா இப்பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார்.