சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆனது, ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்டில் நடத்தப்படுகிறது.
மத்திய சுற்றுலா, ஜவுளி, கலாச்சாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் மற்றும் ஹரியானா சுற்றுலாத் துறை இந்தக் கண்காட்சியினை நடத்துகின்றன.
இந்தியா முழுவதிலும் இருந்து சிறந்தக் கைவினைஞர்கள் இந்தக் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.
சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி என்பது உலகின் மிகப் பெரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சியாகும்.