TNPSC Thervupettagam

சூர்ய கிரண் - 13வது பதிப்பு

June 1 , 2018 2243 days 660 0
  • இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான சூரிய கிரண் எனும் கூட்டுப் போர் பயிற்சியின் 13வது பதிப்பு 2018ஆம் ஆண்டின் மே 30 முதல் ஜீன் 12 வரை உத்தரகாண்டு மாநிலத்தின் பித்தோரகார் நகரில் நடத்தப் படுகின்றது.
  • அண்டை நாடுகளான இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே இராணுவ ஒத்துழைப்பின் அளவினை வலுப்படுத்துவதும் மேலும் அதனை அதிகரிப்பதும் இந்த கூட்டு இராணுவத் திட்டத்தின் நோக்கங்களாகும் .

  • சூரிய கிரண் கூட்டுப் போர் பயிற்சித் தொடரானது ஆண்டிற்கு இரு முறை இந்தியா மற்றும் நேபாளத்தில் மாறி மாறி நடத்தப்படுகின்ற இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான இரு தரப்பு கூட்டுப் போர் பயிற்சித் திட்டமாகும்.
  • சூரிய கிரண் போர் பயிற்சியின் 12வது பதிப்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தின் சல்ஜ்ஹண்டியில் உள்ள நேபாள இராணுவப் போர் பள்ளியில் நடைபெற்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்