இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழக நிறுவனமானது, சூர்ய நூதன் என்ற பெயரில் ஓர் இடத்தில் நிலையாகப் பொருத்தப்பட்ட வகையிலான, மீள் மின்னேற்றம் செய்யக் கூடிய மற்றும் வீட்டிற்குள் பயன்படுத்தும் சமையல் அடுப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
சமையல் அடுப்பு மீதான பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழக நிறுவனம் மற்றும் EKI எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளன.
உணவு சமைப்பதற்காக சூரிய சக்தியைப் பயன்படுத்துகின்ற இந்த அடுப்பினை எப்பொழுதும் சமையலறையில் வைத்தவாறே உபயோகிக்க முடியும்.
ஒரு முறை கொள்முதல் செலவு மற்றும் எந்தவொரு பராமரிப்பு செலவினமும் இல்லாத இந்த அடுப்பு ஆனது, புதைபடிவ எரிபொருட்களுக்கு ஒரு மாற்றாக கருதப்படுகிறது.