TNPSC Thervupettagam

செதில் பாத நத்தை

July 26 , 2019 1821 days 542 0
  • ஆழ் கடல் சுரங்க வேலையின் பாதிப்பின் காரணமாக  “செதில் பாத நத்தை” என்ற ஒரு அரிய வகை நத்தை இனம் “அச்சுறுத்தப்பட்ட இனமாக” அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதலாவது இனமாக உருவெடுத்து இருக்கின்றது.
  • இது மடகாஸ்கருக்கு அருகில் இந்தியப் பெருங்கடலின் நிலப்பரப்பில் மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
  • இது 2019 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று தனது திருத்தப்பட்ட சிவப்புப் பட்டியலில் “அருகி வரும் இனமாக” சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தினால் (International Union for Conservation of Nature - IUCN) சேர்க்கப்பட்டது.
  • தற்பொழுது உலகளவில் அனைத்து கடற்பரப்பு சுரங்க நடவடிக்கைகளிலும் முடக்கம் காணப்படுகின்றது.
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச கடற்பரப்பு ஆணையமானது கடற்பரப்பு சுரங்கத் தொழிலை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை தற்பொழுது தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்