TNPSC Thervupettagam

சென்னை உயர்நீதிமன்றம் - ஐந்து புதிய நீதிபதிகள்

February 11 , 2023 526 days 279 0
  • குடியரசுத் தலைவர், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகளை நியமித்தார்.
  • ஐந்து புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம், 52 என்ற அளவாக இருந்த உயர் நீதிமன்றத்தின் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையானது 57 ஆக உயர்ந்து உள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.
  • மூன்று புதிய பெண் நீதிபதிகள் பதவியேற்ற பிறகு உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தன் மூலம் அது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • புதிய நீதிபதிகளில் ஒருவரான திருமதி விக்டோரியா கௌரி என்பவரது நியமனத்தை சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர்கள் குழு அவர் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக "வெறுக்கத் தக்க உரைகளை" வழங்கியதாகக் கூறி எதிர்த்தது.
  • ஆனால் அவர் பதவிப் பிரமாணம் செய்து முடித்ததையடுத்து, அவரது தகுதி அடிப்படையில் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்