TNPSC Thervupettagam

சென்னை மராத்தான் 2020

January 7 , 2020 1658 days 715 0
  • சென்னை மராத்தான் 2020 போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ஃபெலெக்ஸ் ராப் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கே சுகுணா ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முழு மராத்தான் ஓட்டத்தையும் நிறைவு செய்து, வெற்றி பெற்றுள்ளனர்.
  • சென்னை மராத்தானின் 8வது பதிப்பான ஸ்கெச்சர்ஸ் செயல்திறன் சென்னை மராத்தான் - 2020 ஆனது சென்னையில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகவும் இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பெரிய போட்டியாகவும் விளங்குகின்றது.
  • முன்பு இது “தி விப்ரோ சென்னை மராத்தான்” என்று அழைக்கப்பட்டது.
  • இது 2006 ஆம் ஆண்டு முதல் ஆர்வமுள்ள ஓடும் வீரர்கள் - தன்னார்வலர்களால் நடத்தப்படும் இலாப நோக்கற்ற அமைப்பான சென்னை ரன்னர்ஸ் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்