சென்னையைச் சுற்றியுள்ள ஒன்பது மேம்பாட்டு மையங்களுக்காக என்று புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்குத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
சென்னையைச் சுற்றி மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருநின்றவூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களில் புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தப் புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு நோக்கம் ஆனது, சென்னையில் நெரிசலை நன்கு குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் ஒரு நிலையான மேம்பாட்டினை உறுதி செய்தல் ஆகும்.