TNPSC Thervupettagam

செம்மரம் கடத்தல் பற்றிய CITES தரவு

February 10 , 2023 524 days 284 0
  • CITES வர்த்தக தரவுத்தளமானது, இந்தியக் காடுகளில் இருந்து செம்மரம் பறிமுதல், கையகப் படுத்துதல் மற்றும் தொகுப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டது தொடர்பான 28 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
  • இந்தச் சரக்குகள் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சீனா (53.5%), ஹாங்காங் (25.0%), சிங்கப்பூர் (17.8%) மற்றும் அமெரிக்கா (3.5%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • செம்மரம் அல்லது ப்டெரோகார்பஸ் சாண்டலினஸ், அல்லது சிவப்புச் சந்தன மரம், இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பரவிக் காணப்படும் ஒரு உள்நாட்டு மர இனமாகும்.
  • "செம்மரம்: சட்டவிரோத வன உயிரிகள் வர்த்தகத்தில் இந்தியாவின் செம்மரக் கடத்தல் பற்றிய உண்மைத் தகவல் அறிக்கை" என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, 13,618 டன்களுக்கும் அதிகமான செம்மரங்களை இறக்குமதி செய்ததுடன் சீனா முதலிடத்திலும், ஹாங்காங் (5,215 டன்கள்) மற்றும் சிங்கப்பூர் (216 டன்கள்) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கை (CITES) என்பது அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் சார்ந்த பொருட்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகமானது, உயிரினங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதை உறுதி செய்வதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்