செயற்கை நுண்ணறிவு & எந்திரனியல் தொழில்நுட்பப் பூங்கா
March 18 , 2022 857 days 430 0
நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் தொழில்நுட்பப் பூங்காவானது (ARTPARK) கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடங்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு & எந்திரனியல் தொழில்நுட்பப் பூங்கா ஆனது AI Foundry என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிப்பதற்காக $100 மில்லியன் அளவிற்குத் துணிகர நிதியை வழங்க உள்ளது.