செவ்வாய்க் கிரகத்திலுள்ள நாசாவினுடைய இன்சைட் என்ற தரையிறங்கு விண்கலத்தில் (Lander) 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்நாள் வரையில் 500 நில அதிர்வுகளுக்கும் மேலாக பதிவாகியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் 3.3 மற்றும் 3.1 என்ற அளவில் பதிவாகியுள்ளன.
இவை செர்பெரஸ் ஃபாசே (Cerberus Fossae) எனப்படும் பகுதியில் இருந்து உருவாகி உள்ளன.
செவ்வாய்க் கோளானது நில அதிர்வு ரீதியில் செயல்பாட்டில் உள்ளது என்பதை இந்தத் தகவல்கள் நிரூபணம் செய்கின்றன.