TNPSC Thervupettagam

சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 23

September 23 , 2018 2196 days 717 0
  • சர்வதேச காது கேளாதோருக்கான வாரத்தோடு சேர்த்து சர்வதேச சைகை மொழிகளுக்கான தினமானது ஆண்டுதோறும்  செப்டம்பர் 23ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த வருடம் சர்வதேச சைகை மொழிகளுக்கான முதலாவது தினம் ஆகும். இதன் கருத்துரு “சைகை மொழிகளுடன் சேர்த்து ஒவ்வொருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.”
  • இந்த தினம் காது கேளாதவர்களின் மனித உரிமைகளை, அவர்கள் அதிகபட்சமாக உணரும் வகையில் சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்ப எண்ணுகின்றது.
  • உலக காது கேளாதவர்களுக்கான கூட்டமைப்பால் (World Federation of the Deaf - WFD) சர்வதேச சைகை மொழிகளுக்கான தினம் முன்மொழியப்பட்டது.
  • ஐ.நா. பொதுச்சபை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தினத்தை நிறுவியது. மேலும் இத்தினம் 1951ம் ஆண்டு உலக காதுகேளாதவர்களுக்கான கூட்டமைப்பை நிறுவிய தினமான செப்டம்பர் 23ம் தேதியோடு பொருந்திப்போகும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்