சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் ஆகியோர் “சைபீரியாவின் ஆற்றல்” எரிவாயுக் குழாய்த் தொடர் என்ற ஒரு புதிய எரிசக்தித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவானது அடுத்த 30 ஆண்டுகளில் 1 டிரில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு வழங்க இருக்கின்றது.
இந்த குழாய்த் தொடரானது சைபீரியாவை சீனாவின் ஷாங்காயில் உள்ள யாங்சே நதி கழிமுகத்துடன் இணைக்க இருக்கின்றது.
இது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய பங்காளர்களுடன் யூரேசியாவின் ஒரு மிக நெருங்கிய ஆற்றல் ஒருங்கிணைப்பின் சிறப்பு அடையாளமாக விளங்குகின்றது.