படைத் தளபதி சைலேஷ் தினாய்கர் என்பவர் ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் தெற்கு சூடானுக்கான ஐ.நா திட்டத்தின் (UN Mission in South Sudan - UNMISS) படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதத்தில் UNMISS படைத் தலைவர் என்ற பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள ருவாண்டாவைச் சேர்ந்த படைத் தலைவரான பிரான்க் காமன்சி என்பவருக்கு அடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது இரண்டாவது மிகப் பெரிய அமைதிக் காப்பு நடவடிக்கையாகும்.
இது சூடானிலிருந்துத் தெற்கு சூடான் விடுதலை பெற்ற பின்பு 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இவர் UNMISS-ல் 2400 இந்திய வீர்கள் உள்பட 16,000 அமைதிப் படை வீரர்களை வழி நடத்த விருக்கின்றார்.
1983 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ மையத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர், தனது தன்னிகரில்லாத சேவைக்காக சேனா விருது மற்றும் விஷிஷ்த சேவா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலை
இவர் தற்பொழுது மஹோவில் அல்லது டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள இந்திய இராணுவ காலாட் படைப் பள்ளியின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.
மத்தியப் பிரதேசத்தின் மஹோவில் உள்ள இராணுவப் பள்ளியானது இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான இராணுவப் பயிற்சி மையமாகும்.
இராணுவப் பள்ளியின் ஒரு பகுதியான இராணுவ துப்பாக்கிச் சுடுதல் பிரிவின் கீழ் இயங்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் அணிக்கும் இந்த நிறுவனம் பயிற்சியளிக்கின்றது.