TNPSC Thervupettagam

சொத்து அறிக்கை 2022

March 5 , 2022 869 days 491 0
  • 2021 ஆம் ஆண்டில், உலகளவில் அதிகமான பில்லியனர்கள்  எண்ணிக்கையினைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
  • “நைட் ஃபிராங்” என்ற அமைப்பினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு சொத்து அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலுள்ள அதிஉயர் நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் (ultra-high-net-worth individuals) எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 11% அதிகரித்து ஆண்டிற்கு 145 பில்லியனர்களாக உள்ளது.
  • இது ஆசிய பசிபிக் பகுதியின் மிக அதிக சதவீத உயர்வு ஆகும்.
  • அதிஉயர் நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் என்போர் 30 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட (ரூ. 226 கோடி) மதிப்பிலான நிகர சொத்துகளைக் கொண்டு உள்ளவர்கள் ஆவர்.
  • ந்தப் பட்டியலில் அமெரிக்கா (748) மற்றும் சீனா (554) ஆகியவை முறையே முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் பெங்களூரு நகரில் அதி உயர் நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையானது அதிகளவில் உயர்ந்துள்ளது.
  • இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்