TNPSC Thervupettagam

சோலிகா பழங்குடியினர்

March 2 , 2025 8 hrs 0 min 61 0
  • பிலிகிரி ரங்கணா மலைகள் (BRT) என்ற புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதில் சோலிகா பழங்குடியினர் சமூகத்தின் பங்கைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.
  • சோலிகா பழங்குடி இனத்தின் மக்கள் தொகையானது, சுமார் 40,000 ஆகும் என்பதோடு அவர்களில் பலர் கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில், குறிப்பாக பிலிகிரி ரங்கணா மலைப் பகுதியில் வாழ்கின்றனர்.
  • 2011 ஆம் ஆண்டில் இந்தப் புலிகள் வளங்காப்பகத்திற்குள் வனம் சார்ந்த நிலம் மீதான  உரிமைகளைப் பெற்ற முதல் இனத்தவர் இவர்களே ஆவர்.
  • இங்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக சுமார் 8-10 புலிகளாக இருந்தப் புலிகளின் எண்ணிக்கை தற்போது சுமார் 50 புலிகளாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்