பாதுகாப்பு அமைச்சகமானது, ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில், ‘சௌர்யா திவாஸ்’ கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இது 1947 ஆம் ஆண்டில் புட்காம் விமான நிலையத்தில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட விமானம் சார்ந்த நடவடிக்கையின் 75வது ஆண்டு நிறைவினை நினைவு கூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதியன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற பழங்குடி படையெடுப்பாளர்களை வெளியேற்றச் செய்வதற்காக இந்திய இராணுவமானது இந்திய விமானப் படை மூலம் விமானத்தில் ஏற்றப்பட்டு, புட்காம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.