இந்தத் தினமானது மரபியல் மருந்துகளின் பயன்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகவும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப் படுகின்றது.
முதலாவது ஜன் அவுசதி திவாஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று அனுசரிக்கப் பட்டது.
மார்ச் 01 ஆம் தேதி முதல் மார்ச் 07 ஆம் தேதி வரை நாடு முழுவதும் “ஜன் அவுசதி சேவா பிகி, ரோஜ்கர் பிகி” என்ற கருத்துருவுடன் “ஜன் அவுசதி வாரமானது” அனுசரிக்கப் படுகின்றது.
ஜன் அவுசதி மையங்கள் உலகின் மிகப்பெரிய சில்லறை ரீதியிலான ஒரு மருந்துச் சங்கிலியாக விளங்குகின்றது.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசதி பரியோஜனா என்ற முன்னெடுப்பானது பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான மருந்துகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.