1947 ஆம் ஆண்டில் மகாராஜா ஹரி சிங், ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தினத்தை இது நினைவு கூருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் இணைப்புத் தினமானது, 2020 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பொது விடுமுறை நாளாக மாற்றப் பட்டது.
முதலில், மகாராஜா ஹரி சிங் தனது மாநிலத்தின் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்து, இரு அண்டை நாடுகளுடனும் நிலைத்தன்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இருப்பினும், பதான் பழங்குடியினர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் தாக்குதல்களை எதிர் கொண்ட அவர், இந்தியாவின் உதவியை நாடினார்.
இவ்வாறு, மகாராஜா 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.