TNPSC Thervupettagam

ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

May 21 , 2023 427 days 304 0
  • காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் எருமைப் பந்தய விளையாட்டான கம்பாலா போன்றவற்றை அந்தந்தப் பகுதிகளில் நடத்துவதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இயற்றியச் சட்டங்களின் செல்லுபடித் தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.
  • 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தினை மீறுவதாகக் கூறி இந்த விளையாட்டுகளை 2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
  • விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017 மற்றும் விலங்குகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துதல்) விதிகள் 2017 ஆகியவற்றை தமிழ்நாடு நிறைவேற்றியது.
  • விலங்கு வதையினைத் தடுப்பதற்கான சட்டங்கள் அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையின் பொதுப் பட்டியலின் (பட்டியல் 3) 17வது உள்ளீடுடன் தொடர்புடையப் பிரிவாகும்.
  • "ஏறு தழுவுதல்" என்றும் அழைக்கப்படும், "ஜல்லிக்கட்டு" போட்டியானது பொங்கல் அறுவடைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை தழுவும் விளையாட்டுப் போட்டியாகும்.
  • கர்நாடகாவில் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும் கம்பாலா என்ற பந்தயமானது ஒரு ஜோடி எருமை மாடுகளை ஒரு கலப்பையில் கட்டி, ஒருவரால் நடத்தி உழப்படும் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்