TNPSC Thervupettagam

ஜவாத் ரஹிம் - தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல் தலைவர்

April 2 , 2018 2300 days 738 0
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal-NGT)    தலைவர் ஓய்வு பெற்று மூன்று மாதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்      பொறுப்புத் தலைவராக   கர்நாடக உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஜவாத் ரஹிமை உச்ச  நீதிமன்றம் நியமித்துள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  முந்தைய தலைவரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  திரு.சுவதந்தர் குமார் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்   வழக்கறிஞர் குழு அல்லது பார் அசோசியேஷன் தொடர்ந்த மனுவின் மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான  3 பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்   தலைவர் பதவிக்கு முறையான நியமனம் மேற்கொள்ளப்படும் வரை நீதிபதி ரஹிம் தன் பணிகளை மேற் கொள்வார். மேலும் இவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய பிற உறுப்பினர்களின் தேர்ந்தெடுப்பு செயல்முறையில் (Selection Process) பங்கெடுப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்